கோயில் வரலாறு

ஆரம்பம்

கோயிலின் வரலாறு 150 ஆண்டுகளுக்கு முன்னர் - 1850களில் - ஒரு குளத்தின் ஓரத்தில் விநாயகர் சிலை கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து தொடங்கியது. குளத்தின் கரையில் நின்ற ஒரு செண்பகமரம் ஶ்ரீ செண்பக விநாயகர் கோயிலின் தலவிருட்சமாக அடையாளம் காணப்பட்டது. ஸ்ரீ என்ற சொல் ஒரு மரியாதையை முன்னிட்டு வழங்கப்பட்ட சொல்லாகும். இலங்கை தமிழர் திரு எதிர்நாயகம்பிள்ளை முதல் கட்டமைப்பை கட்டியெழுப்ப முன்னோடியாக இருந்தார், இந்திய தொழிலாளர்களின் உதவியுடன் கூரையுடன் கூடிய செண்பகமரத்தின் அடியில் இருக்கும் சாதாரணமானதங்குமிடம், ஸ்ரீ செண்பக விநாயகரின் ஆலயமாக மாறியது.

அந்தணர்கள் நியமனம்

APPOINTMENT OF PRIEST1909 ஆம்ஆண்டில், சுமார் 300 குடும்பங்களாக அதிகரித்த இலங்கை தமிழர்கள், சிங்கப்பூர் இலங்கை தமிழர் சங்கத்தை (SCTA) உருவாக்கினாரகள். 1913 ஆம் ஆண்டில், நான்கு நபர்களைக் கொண்ட ஒரு நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. வளாகத்தை புதுப்பிக்க, 1923 ஆம் ஆண்டில் கோயில் அமைந்திருந்த நிலத்தை வாங்குவதன் மூலம் சிங்கப்பூர் இலங்கை தமிழர் சங்கம் (SCTA) ஆலயத்திற்கு உதவியது. இதன் மூலம் தொடர்ந்து அதிகரித்து வரும் பக்கர்களின் வழிபாடு சீரமைக்கப்பட்டது. பின்னர் ஒரு பிரதான அந்தணருடன் பிரார்த்தனைகள் (பூஜைகள்) மற்றும் பிற மத விழாக்கள் தொடங்கப்பட்டது.

சிங்கப்பூர் இலங்கை தமிழர் சங்கத்தின் (SCTA) பங்களிப்பு

1923 ஆம் ஆண்டில், சிங்கப்பூர் இலங்கை தமிழர் சங்க (SCTA) உறுப்பினர்களிடமிருந்து கோயில் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த ஆண்டு முதல் திருஎஸ். முத்துகுமாரு இந்த தன்னாட்சி கோயிலின் அதிகாரப்பூர்வ பராமரிப்பாளராகவும் மேலாளராகவும் ஆனார். அடுத்த ஆண்டில், கோயிலை மேம்படுத்த குழு முடிவு செய்தது. திரு எஸ். முத்துகுமருவின் தலைமையில், திட்டங்கள் 1926 இல் இறுதி வடிவம் செய்யப்பட்டு ஒரு சிற்பி நியமிக்கப்பட்டார். சீமெந்து (Concrete) கட்டிடத்தின் கட்டுமானம் 1929 இல் நிறைவடைந்தது.

முதலாவது மகா கும்பாபிஷேகம் (குடமுழுக்கு விழா)

APPOINTMENT OF PRIEST1930ம் ஆண்டில் பல நல்ல சமூக தலைவர்களினதும், ஆலய தலைவரினதும், பக்தர்களினதும் தாராளமான நன்கொடைகள், கோயிலின் எல்லைக்குள் பல புதிய பரிவாரங்களை அமைக்க உறுதுணையாகியது. அவற்றில் சிவன், அம்பாள், சுப்பிரமணியர், வைரவர் மற்றும் நாகேஸ்வரர் ஆகிய பரிவாரங்கள் அமையப்பெற்றன., 1930ம் ஆண்டு மாசி மாதம் 3ம் திகதி அன்று கோயிலில் கோயிலின் முதலாவது மகா கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) வெகு விமரிசையாக நடைபெற்றது.

இரண்டாவது உலகப் போருக்குப் பின்

இரண்டாம் உலகப் போரின் போது, ஒரு குண்டு கோயிலை சேதப்படுத்தியது. டாக்டர் பி. தில்லைநாதன் தலைமையில் 1949 ஆம் ஆண்டில் மறு சீரமைப்பு தொடங்கியது, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 1955 ஜூலை 7 அன்று பக்தர்கள் இரண்டாவது மகா கும்பாபிஷேகத்தினை கண்டு தரிசித்தனர். கோயிலை அவ்வப்போது மேம்படுத்தியதன் விளைவாக புதிய அரங்குகள், சமையலறைகள், வகுப்பறைகள், சுற்றுப் பிரகாரசுவர், திருமண மேடை மற்றும் ஒரு நூலகம் ஆகியவை சேர்க்கப்பட்டன. நவம்பர் 8, 1989 அன்று, அப்போதைய மூத்த அமைச்சர் எஸ். ராஜரத்தினம் மூன்று மாடிகட்டட நீடிப்பை குளிரூட்டப்பட்ட திருமண மண்டபம் மற்றும் சாப்பாட்டு மண்டப வசதிகளுடன் திறந்து வைத்தார்.

புதிய கோயில்

APPOINTMENT OF PRIESTநாளடைவில் கோயிலின் கூரையிலிருந்து சீமேந்து துண்டுகள் விழத்தொடங்கின, அதன் சுவர்களில் விரிசல்களும் தோன்றின. இந்த நிகழ்வுகள் சிங்கப்பூர் இலங்கை தமிழர் சங்கத்தை (SCTA) செயல்பட தூண்டியது. 1998ம் ஆண்டு வருடாந்த பொதுக்கூட்டத்தில், கோயிலின் புனரமைப்புக்கான திட்டத் தலைவராக பிபிஎம் டாக்டர் ஆர் தெவேந்திரனை நியமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத்துறையில் அவருக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிபுணத்துவமே இருந்த போதிலும், அவர் சவாலை ஏற்றுக்கொண்டு தனது தொழில் முனைவோர் திறன்களை பிரயோகிக்க தொடங்கினார். அவருக்கு, ஆலய முன்னாள் தலைவரும் ஆலோசகருமான திரு எஸ்.எம்.வாசகர்; கோயில் மேலாண்மைக் குழுவின் தலைவர் பிபிஎம் திரு. எஸ். மோகனருபன், மற்றும் அதன் அர்ப்பணிப்புமிக்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் உறுதுணையாக இருந்தனர்.

செயலி பதிவிறக்கம் செய்ய (விரைவில்)

எங்கள் பக்தர்களுக்காக மொபைல் பயன்பாட்டை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்,
நீங்கள் google மற்றும் ஐபோன் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.